புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்னாரது சிலைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சுட்டுரையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அன்னாருக்கு எனது அஞ்சலிகள்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.