தில்லியில் உள்ள ஜம்ம மசூதிக்கு அருகே தில்லி காவல்துறையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மேலும், ரமலான் நோன்பிருக்கும் முஸ்லிம் மக்கள் அனைவரும், நாடு முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அவரவர் இல்லங்களிலேயே தொழுகையை நடத்துமாறும் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி வாயிலாக வலியுறுத்தினர்.
ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஏராளமான முஸ்லிம் மக்கள் மசூதிக்கு வந்து தொழுகை நடத்துவது வழக்கம் என்பதால், இன்றைய தினம் முன்னெச்சரிக்கையாக தில்லி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தி, இப்பகுதியை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்தனர்.
மேலும், முஸ்லிம் மக்கள் மசூதிக்கு வருவதைத் தவிர்க்கும் பொருட்டு ஒலிப்பெருக்கி வாயிலாகவும் கோரிக்கையை முன்வைத்தனர்.