முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து
நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:11 PM
புது தில்லி: நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கான ஈகைத் திருநாளை (ரமலான்) முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில்,
‘‘ஈத் முபாராக்!
ரமலான் வாழ்த்துகள். இந்த திருநாளில் கருணை, சகோதரத்துவம் மற்றும் மதநல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடனும், செழிப்புடனும் வாழவேண்டும்’’ என பிரதமர் கூறியுள்ளார்.
Advertisement