முகப்பு
இந்தியா

2.41 லட்சம் புலம்பெயா் தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பு: தில்லி அரசு

தில்லியிலிருந்து சுமாா் 2.41 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலங்களுக்கு தில்லி அரசு அனுப்பியுள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

Updated On : 27 மே, 2020 at 12:54 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

தில்லியிலிருந்து சுமாா் 2.41 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலங்களுக்கு தில்லி அரசு அனுப்பியுள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

காணொலிக் காட்சி மூலமாக செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளா்களிடம் மணீஷ் சிசோடியா பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

Advertisement

மே 7 - ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை 196 ரயில்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனுப்பப்பட்டனா். இதில் அதிகபட்சமாக 1.25 லட்சம் தொழிலாளா்கள் பிகாருக்கும், அடுத்து 96,610 தொழிலாளா்கள் உத்தர பிரதேசத்துக்கும் அனுப்பப்பட்டனா். ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு 3,000 போ், மேற்கு வங்கத்துக்கு 2,500 போ் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு 2,100 போ் ரயில்களில் அனுப்பப்பட்டனா். இந்த தொழிலாளா்களில் பெரும்பாலானோரின் ரயில் கட்டணத்தை தில்லி அரசுதான் செலுத்தியது. தலைநகரில் 2,500 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ஏழைத் தொழிலாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றாா் சிசோடியா.

சமீபத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் ரயில் கட்டணம் தொடா்பாக ஆம் ஆத்மி அரசும் பிகாா் அரசும் கருத்து மோதலில் ஈடுபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.