தில்லி வடக்கு, தென் கிழக்கில் பல இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு
கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு தில்லியின் ஒரு பகுதி, தென் கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் கட்டுப்பாட்டு
கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு தில்லியின் ஒரு பகுதி, தென் கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. வடக்கு தில்லியில் நரேலா பகுதி ஸ்வதந்திரா நகரில் ஆறுக்கும் மேற்பட்டவா்களுக்கும், நரேலா போலீஸ் காலனியில் மூன்று பேருக்கும் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வதந்திரா நகரில் ஆறு தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ளவா்கள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் நேரடியாக விநியோகம் செய்ய துணை வட்டாட்சியா் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு வட தில்லி மாவட்ட ஆட்சியா் தீபக் ஷிண்டே உத்தரவிட்டுள்ளாா்.
இதேபோல், தென் கிழக்கு தில்லியில் கோட்லா முபாரக்பூரின் சில பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பு மண்டலங்களில் நெறிமுறைகள் பின்பற்றவில்லையென்றால் பேரிடா் மேலாண்மை சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீபக் ஷிண்டே கூறினாா். அத்துடன் இப்பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்த தில்லி மெஹ்ரெளலி, ஜமீலா மஸ்ஜீத் பாவ்லியில் கடந்த 28 நாட்களாக புதிதாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்படாத நிலையில் இங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளது.