இந்தியா

மருத்துவர்களுக்கு பூங்கொத்து வழங்கி கௌரவித்த காஷ்மீர் போலீஸார்

DIN

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு பூங்கொத்து வழங்கி கௌரவித்துள்ளனர் காஷ்மீர் போலீஸார். 

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் வைரஸ் தொற்றுக்கு எதிராக பாதிக்கப்பட்டோரை வைரஸ் தொற்றில் இருந்து மீட்க மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர். மேலும், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு காஷ்மீர் போலீஸார் பூங்கொத்து வழங்கி கௌரவித்துள்ளனர். 

காஷ்மீர் எல்.டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு காஷ்மீர் போலீஸார் பூங்கொத்து கொடுத்து அவர்களின் சேவையைப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT