கேரளத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளை முதல்வர் பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி, அங்கு இன்று (சனிக்கிழமை) புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 624 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 575 பேர் குணமடைந்துள்ளனர்.