முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் அக். வரை 200 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 200 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பாதுகாப்புப் படை வீரர்கள்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 200 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு தொகுத்த தரவுகளின்படி, மத்திய ரிசர்வ் காவல் படை, இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை போன்ற இந்தியப் படைகள் இந்த ஆண்டு அதிகபட்சமாக ஜூன் மாதத்தில் 49 பயங்கரவாதிகளை கொன்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு அதிகமாகும்.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் மாதம் 28 பயங்கரவாதிகள், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் வரை மொத்தம் அதிகபட்சமாக தெற்கு காஷ்மீரில் 138 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத குழுக்களுக்கு உள்ளூர் இளைஞர்களை அதிகளவில் சேர்த்துக் கொண்டுள்ள ஷோபியன் மற்றும் புல்வாமா பகுதிகளில் 98 பயங்கரவாதிகளின் (இரண்டு மாவட்டங்களில் தலா 49) கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் இராணுவத்தால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனின் 72 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் கொன்றுள்ளனர்.

இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்த 59 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமதுவின் 37 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மற்ற 32 பயங்கரவாதிகள் இஸ்லாமிய அமைப்பு (ஐ.எஸ்) உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →