முகப்பு
இந்தியா

திருமலையில் 27,107 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 27,107 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 10,517 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
திருமலையில் 27,107 போ் தரிசனம் (கோப்புப்படம்)
பகிர்:

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 27,107 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 10,517 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 3 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் உள்ளிட்டவற்றைப் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

கரோனா பாதிப்புக்குப் பிறகு தொடங்கப்பட்ட தரிசனத்தில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை 27 ஆயிரம் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனா்.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்போருக்கு தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →