முகப்பு
இந்தியா

உ.பி. காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து 

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத்தில் காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் எரிந்து சேதமாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
Fire in UP vegetable market, shops gutted 
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத்தில் காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் எரிந்து சேதமாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

இன்று அதிகாலை 1:25 மணியளவில் அங்குள்ள கடைகளில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

சுமார் ஏழு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தலைமை தீயணைப்பு அதிகாரி ஜஸ்வீர் சிங் கூறினார். 

தீ விபத்தில் பல கடைகள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.