முகப்பு
உலகம்

ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரை

ஈரானை கடுமையாகத் தாக்குவோம்; இலக்கை நெருங்கிவிட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 2 ஏப்ரல், 2026 at 3:00 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பகிர்:

ஈரானுக்கு எதிரான போரில் இலக்கை நெருங்கி விட்டதாகவும், இன்னும் கடுமையாக ஈரானைத் தாக்குவோம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை உரையாற்றினார்.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் நடவடிக்கைகள் குறித்து ஆரம்பத்தில் இருந்தே நமது இலக்குகள் முழுமயாக நிறைவேறும் என்று கூறி வந்தோம். ஆனால், நாம் அதிரடித் தாக்குதல்களால், இந்தப் போரில் மிக வேகமாக முன்னேறியிருக்கிறோம்.

நாங்கள் இந்த போரை இன்னும் வேகமாக முடிப்போம். கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிவிட்டோம். அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குங்கள். சௌதி அரேபியாவைவிட அதிகளவில் உற்பத்தி செய்கிறோம். நீங்கள் எங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம்.

ஈரானுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆதரவளித்த மத்திய கிழக்கில் உள்ள சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி. எந்த அதிபரும் செய்யாததை நான் செய்தேன். அணுஆயுத தளங்கள்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டேன்.

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க மற்ற நாடுகளும் அமெரிக்காவுக்கு துணையாக இருக்க வேண்டும். 2-3 வாரங்கள் ஈரானை கடுமையாகத் தாக்கப் போகிறோம். அவர்களை ஆயுதங்கள் எதுவுமில்லாத கற்காலத்திற்கு மீண்டும் கொண்டுச் செல்லப்போகிறோம்” என்றார்.

summary

In his first address to the nation since launching strikes on Iran four weeks ago, US President Donald Trump on Thursday said Washington is on the "verge of completing its core war objectives".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.