முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவு

நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

Updated On : 5 நவம்பர், 2020 at 4:11 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

கடந்த ஒரு வாரமாக, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 5,27,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மொத்த பாதிப்பில் 6.31%. சிகிச்சை பெறுபவர்களில் 78% பேர், 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளனர்.

குணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது.இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77,11,809 ஆக உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 72 லட்சமாக உள்ளது.

Advertisement

குணமடைவோர் வீதம் 92.20% மாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோயாளிகள் 55,331 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 50,210 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 704 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 300 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.