இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவு
நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 5,27,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மொத்த பாதிப்பில் 6.31%. சிகிச்சை பெறுபவர்களில் 78% பேர், 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளனர்.
குணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது.இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77,11,809 ஆக உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 72 லட்சமாக உள்ளது.
Advertisement
குணமடைவோர் வீதம் 92.20% மாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோயாளிகள் 55,331 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 50,210 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 704 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 300 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.