ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்வில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி..
மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாளையொட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத்தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியாக அறியப்படும் மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1827 ஏப். 11 அன்று பிறந்தார். இவரது மனைவியம் சாவித்திரிபாய் புலேவும் சமூக சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்றினார்.
தில்லியில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Advertisement
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜோதிபா புலேவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, நிகழ்விடத்திற்கு வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.