ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்வில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி..
மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாளையொட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துரையாடினர்.
தில்லியில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜோதிபா புலேவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, நிகழ்விடத்திற்கு வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். மிகவும் இயல்பாக இருவரும் பேசிக்கொண்டனர்.
Advertisement
Advertisement
அரசியல்ரீதியாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இரு தலைவர்களும் பேசிக்கொண்டது இணையத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோருடனும் ராகுல் காந்தி பேசினார்.
PM Modi interacts with Rahul gandhi in parliament on Mahatma Jyotiba Phule 200th birth anniversary
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.