எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் எல்லையில் அத்துமீறி தாக்குதல் மற்றும் பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுப்படுகின்றன.
இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளான ஷாப்பூர், கிர்னி மற்றும் கஸ்பா செக்டாரில் கையெறி குண்டுகளை வீசியும், சிறிய ரக துப்பாக்கிகளைக் கொண்டும் பாகிஸ்தான் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
துரிதமாக செயல்பட்ட இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.