முகப்பு
இந்தியா

'கரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு'

கடந்த 5 நாள்களாக கரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 நவம்பர், 2020 at 3:31 PM
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

கடந்த 5 நாள்களாக கரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து தனிமைப்படுத்த வேண்டிய இடங்களைக் கண்டறிந்து தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் ஒரு சில மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement

இதனிடையே இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாட்டில் சராசரியாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்திலிருந்து 46 ஆயிரமாக குறைந்துள்ளது. 

அக்டோபர் மாதத் துவக்கத்தில் 73 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த கரோனா பாதிப்பு தற்போது 46 ஆயிரத்தில் பதிவாகி வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோருக்கும், சிகிச்சை பெற்று வருவோருக்குமான வித்தியாசம் 72,50,000 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 77,65,966 பேர் குணமடைந்துள்ளனர். 5,20,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.