விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?
தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி...
கடலூரில் இன்று(ஏப். 11) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம் திடல், வடலூர் நான்குமுனை சந்திப்பு, சேத்தியாத்தோப்பு நான்குமுனை சந்திப்பு, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் ஏப். 9 ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஏப். 9 அன்று புதுவை தேர்தலால் கடலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டு ஏப். 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
Advertisement
அதன்படி இன்று(ஏப். 11) கடலூர் பிரச்சாரத்திற்கு அனுமதி இருந்தும், தவெக தரப்பில் இருந்து பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் காரணங்களுக்காக பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கடலூர் பிரசார தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தவெக கூறியுள்ளது.
நேற்று தொண்டர்கள் கூடியதால், விஜய் பிரசாரம் செய்யும் இடத்திற்குத் தாமதமாகச் சென்றதால் காரைக்குடியில் அவர் பேசாமலே சென்றது குறிப்பிடத்தக்கது.