முகப்பு
இந்தியா

பிகார்: வெளியானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

​பிகார் பேரவைத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. பிகாரில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நீடிக்கலாம் என்று தெரிகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
கோப்புப்படம்
பகிர்:


பிகார் பேரவைத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. பிகாரில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நீடிக்கலாம் என்று தெரிகிறது. 

243 பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

பிகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை.

பீப்பில்ஸ் பல்ஸ்: 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 85 முதல் 95 இடங்கள்

பாஜக - 65 முதல் 75 இடங்கள்

ஐக்கிய ஜனதா தளம் - 25 முதல் 35 இடங்கள்

காங்கிரஸ் - 15 முதல் 20 இடங்கள்

இடதுசாரிகள் - 3 முதல் 5 இடங்கள்

லோக் ஜனதா கட்சி - 3 முதல் 5 இடங்கள்


டைம்ஸ் நவ்-சி:

மகா கூட்டணி - 120 இடங்கள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 116 இடங்கள்

லோக் ஜனதா கட்சி - 1 இடம்


இந்தியா டுடே - மை ஆக்சிஸ்:

அடுத்த முதல்வராக தேஜஸ்வி யாதவை விரும்புபவர்கள்: 44 சதவிகிதத்தினர்

அடுத்த முதல்வராக மீண்டும் நிதிஷ் குமாரையே விரும்புபவர்கள்: 35 சதவிகிதத்தினர்


நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →