பிகார்: வெளியானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
பிகார் பேரவைத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. பிகாரில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நீடிக்கலாம் என்று தெரிகிறது.
பிகார் பேரவைத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. பிகாரில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நீடிக்கலாம் என்று தெரிகிறது.
243 பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பிகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை.
பீப்பில்ஸ் பல்ஸ்:
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 85 முதல் 95 இடங்கள்
பாஜக - 65 முதல் 75 இடங்கள்
ஐக்கிய ஜனதா தளம் - 25 முதல் 35 இடங்கள்
காங்கிரஸ் - 15 முதல் 20 இடங்கள்
இடதுசாரிகள் - 3 முதல் 5 இடங்கள்
லோக் ஜனதா கட்சி - 3 முதல் 5 இடங்கள்
டைம்ஸ் நவ்-சி:
மகா கூட்டணி - 120 இடங்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 116 இடங்கள்
லோக் ஜனதா கட்சி - 1 இடம்
இந்தியா டுடே - மை ஆக்சிஸ்:
அடுத்த முதல்வராக தேஜஸ்வி யாதவை விரும்புபவர்கள்: 44 சதவிகிதத்தினர்
அடுத்த முதல்வராக மீண்டும் நிதிஷ் குமாரையே விரும்புபவர்கள்: 35 சதவிகிதத்தினர்
நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.