தில்லியில் விரைவில் கரோனா குறையும்: சுகாதாரத்துறை அமைச்சர்
தில்லியில் மூன்றாவது முறையாக கரோனா பரவி வரும் நிலையில், தொற்று பரவல் விரைவில் குறையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் மூன்றாவது முறையாக கரோனா பரவி வரும் நிலையில், தொற்று பரவல் விரைவில் குறையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் 80 சதவிகிதம் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்ற மாநில அரசின் ஆணையை நிராகரித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.
தில்லியில் கடந்த சில நாள்களாக கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று மூன்றாவது முறையாகப் பரவத் தொடங்கியுள்ளது.
இதனிடையே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''தில்லியில் மூன்றாவது முறையாக அதிகரித்து வரும் கரோனா தொற்று விரைவில் குறையும். அதற்கான முயற்சியாக அரசு சார்பில் பரிசோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு கரோனா மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளன. தளர்வுகள் மற்றும் பண்டிகை காலத்தையொட்டி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதே தொற்று பரவக் காரணமாக உள்ளது.
மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கடைவீதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்'' என்று கூறினார்.