மகாராஷ்டிரத்தில் மேலும் 105 பேர் கரோனாவுக்கு பலி
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் மேலும் 105 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் குணமடைவோர் விகிதமும் குறைந்து வருகிறது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் மேலும் 105 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் குணமடைவோர் விகிதமும் குறைந்து வருகிறது.
105 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 45,914 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 4,237 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,44,698 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு குணமடைவோர் விகிதம் 92.41 சதவிகிதத்திலிருந்து 92.48 சதவிகிதமாகியுள்ளது. எனினும் இறப்பு விகிதம் 2.63 சதவிகிதமாக உள்ளது.
Advertisement
அதேசமயம் 2,707 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,12,314 பேர் குணமடைந்துள்ளனர். 85,503 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.