மணிப்பூர் முதல்வருக்கு கரோனா
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மணிப்பூரில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கரோனாவிற்கு முன்களப் பணியாளர்கள் உள்பட அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Advertisement
அந்தவகையில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் சமீப காலமாக தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.