முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் மிகக்குறைவாக பதிவான கரோனா

தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில், இன்று 661 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 நவம்பர், 2020 at 11:42 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM

தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில், இன்று 661 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, புதிதாக 661 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக பதிவாகி வந்த தொற்று எண்ணிக்கையை விட இது குறைவானது. இம்மாதத்தில் முதல்முறையாக 700-க்கும் குறைவாக தொற்று பதிவாகியுள்ளது.

Advertisement

எனினும் தெலங்கானாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.57 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 15,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதிதாக 8 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,404-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.54-ஆக பதிவாகியுள்ளது. தேசிய அளவோடு ஒப்பிடும்போது 1.5 சதவிகிதமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.