ஹரியாணா ஆளுநருக்கு கரோனா தொற்று
ஹரியாணா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவுக்கு (81) கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM
ஹரியாணா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவுக்கு (81) கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.
ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
ஆளுநர் சத்யதேவ் விரைவில் குணமடைய வேண்டி மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement