இந்தியா

ஏ.கே. அந்தோனி, மனைவி எலிசபெத் அந்தோனிக்கு கரோனா

DIN


முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி மற்றும் அவரது மனைவி எலிசபெத் அந்தோனிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அவரது மகன் அனில் கே அந்தோனி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"எனது தந்தை ஏ.கே. அந்தோனி மற்றும் தாய் எலிசபெத் அந்தோனி இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல் நிலை சீராக உள்ளது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும்."

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது ஏ.கே. அந்தோனி மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT