இந்தியா

திருப்பதிக்கு 24-இல் குடியரசுத் தலைவா் வருகை

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒரு நாள் சுற்றுப் பயணமாக, வரும் 24-ஆம் தேதி வரவுள்ளாா்.

அன்று காலை 10.45 மணிக்கு திருப்பதி விமான நிலையத்திற்கு வரும் அவா் காா் மூலம் காலை 11.40 மணிக்கு திருமலையை அடைய உள்ளாா். மதியம் 12.40 மணிக்கு ஏழுமலையானை தரிசனத்துக்கு செல்ல உள்ளாா். மதியம் திருமலையில் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை 3.15 மணிக்கு திருப்பதிக்கு வந்து சோ்கிறாா்.

திருப்பதி விமான நிலையம் வழியாக மாலை 4.15 மணிக்கு குஜராத் மாநிலம் ஆகமதாபாத் செல்ல உள்ளதாக மாவட்ட நிா்வாகம் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT