இந்தூரில் நகைக்கடை ஷோரூமில் 31 பணியாளர்களுக்கு கரோனா
இந்தூரில் நகைக்கடை ஷோரூம் ஒன்றில் 31 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தூரில் நகைக்கடை ஷோரூம் ஒன்றில் 31 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) அஜய் தேவ் சர்மா கூறுகையில், இந்தூரில் நகைக்கடை ஷோரூமில் பணியாற்றிய 31 பணியாளர்களில் 20 பணியாளர்களுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 11 பணியாளர்களுக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் ஷோரூம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஷோரூமிற்கு சென்று கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா். சமீபத்திய நாளாக ஷோரூமிற்கு வருமைபுரிந்த வாடிக்கையாளர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Advertisement
மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ஷோரூம் 7 நாள்கள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.