கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் பரிசோதனை அதிகரிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

​தில்லியில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை 37,200 ஆக அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஐசிஎம்ஆர்-ஐ அறிவுறுத்தியுள்ளது.

DIN


தில்லியில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை 37,200 ஆக அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஐசிஎம்ஆர்-ஐ அறிவுறுத்தியுள்ளது.

இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி, தில்லியில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை ஐசிஎம்ஆர் ஒருநாளைக்கு 27,000-இல் இருந்து 37,200 ஆக உயர்த்தியுள்ளது. நவம்பர் 15-ம் தேதி 12,055 ஆர்டி - பிசிஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 19-ம் தேதி 30,735 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன."

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது தில்லியில்தான். தில்லியில் 6,608 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 40,936 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 5,17,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,68,143 பேர் குணமடைந்துள்ளனர். 8,159 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே 13 கோடி கரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை இந்தியா வெள்ளிக்கிழமை எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT