இந்தியா

குஜராத்தில் கார் - லாரி மோதி விபத்து: 7 பேர் பலி

DIN


குஜராத்தில் லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் சுரேந்திரா நகர் மாவட்டத்தில் வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

சுரேந்திரா நகர் மாவட்டத்தின் பட்டி பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், கார் நொறுங்கி சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. லாரியின் முகப்பு சேதமடைந்தது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT