இந்தியா

மகாராஷ்டிரத்தில் மீண்டும் பொது முடக்கம்? அஜித் பவார் சூசகம்

DIN


மகாராஷ்டிரத்தில் அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் காண்காணித்து ஆய்வு செய்த பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி புணேவில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

"தீபாவளி சமயத்தில் பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நேரத்தில்கூட பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்யவுள்ளோம். அதன்பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும்.

தற்போது கரோனா 2-ம் அலை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது" என்றார் அஜித் பவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT