சண்டிகரில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்
சண்டிகரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதக்கட்டணம் ரூ.500யிலிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சண்டிகரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதக்கட்டணம் ரூ.500யிலிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சண்டிகரில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ரூ.500 ஆக இருந்த அபராதத் தொகை ரூ.1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.