முகப்பு
இந்தியா

‘விவசாயிகளை எதிரிகளாகக் கருதும் மத்திய அரசு’: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர்

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதான் தாக்குதலின் மூலம் மத்திய அரசு விவசாயிகளை தங்களது விரோதிகளாகக் கருதுவது தெரியவருவதாக முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கெளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர்
பகிர்:

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதான் தாக்குதலின் மூலம் மத்திய அரசு விவசாயிகளை தங்களது விரோதிகளாகக் கருதுவது தெரிய வருவதாக முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கெளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி செல்வோம் என்ற பெயரில் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள் மீது சிங்கு எல்லைப் பகுதியில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்தனர்.

தில்லியை ஹரியாணாவுடன் இணைக்கும் எல்லைப் பகுதியில், விவசாயிகள் மீது தில்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். 

இந்நிலையில் சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர் மத்திய பாஜக அரசு விவசாயிகளை எதிரிகளாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு தினத்தன்று விவசாயிகளின் மீது மத்திய அரசு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த கெளர் இது நாட்டின் விவசாயிகளுக்கு ஒரு கருப்பு நாளாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →