ஜம்மு-காஷ்மீர்: கரோனா பாதித்த கைதிகளுக்காக புதிய சிறை
ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க புதிதாக தற்காலிக சிறைகள் அமைக்கப்படும் என்று சிறைத்துறை இயக்குநர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க புதிதாக தற்காலிக சிறைகள் அமைக்கப்படும் என்று சிறைத்துறை இயக்குநர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பகுதியில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. ஜம்மு பகுதியில் அதிக அளவிலான சிறைக்கைதிகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய சிறைத்துறை இயக்குநர் வி.கே.சிங், ''காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர் மத்திய சிறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகளில் 200 கைதிகள் குணமடைந்துள்ளனர்.
Advertisement
எனினும் கடந்த சில வாரங்களாக ஜம்மு பகுதியில் உள்ள அம்பாலா சிறையில் 56 பேருக்கும், கத்துவா சிறையில் 51 பேருக்கும், ரஜோரி பகுதி சிறையில் 50 பேருக்கும், படேர்வா பகுதி சிறையில் 24 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தொற்று அதிகம் உள்ள இடங்களில் தற்காலிக சிறை அமைக்கப்படும். இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்காலிக சிறையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதன் மூலம் மற்ற கைதிகளுக்கு கரோனா பரவுவது தடுக்கப்படும்'' என்று அவர் கூறினார்.