முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் கரோனாவிலிருந்து மீண்ட அடுத்த நாளே மரணமடைந்த அமைச்சர்

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி, கரோனாவில் இருந்து மீண்ட அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2020 at 5:57 PM
ஜார்க்கண்டில் கரோனாவிலிருந்து மீண்ட அடுத்த நாளே மரணமடைந்த அமைச்சர்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:00 PM


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி, கரோனாவில் இருந்து மீண்ட அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையின் பலனாக, அவருக்கு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று குணமடைந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அன்சாரி இன்று மரணமடைந்தார். அவர் ஏற்கனவே இதயம் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

73 வயதாகும் அன்சாரி, நான்கு முறை மதுப்பூர் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவரது மரணத்துக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.