முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2020 at 10:19 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:00 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,30,861 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 278 பேர் பலியாகியுள்ளனர், 16,835 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 37,758 பேர் பலியாகியுள்ளனர், 11,34,555 பேர் குணமடைந்துள்ளனர். 2,58,108 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 79.3 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.64 சதவிகிதமாக உள்ளது. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 20.34 சதவிகிதமாக உள்ளது. 

22,03,966 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 28,414 பேர் கரோனா மையங்களிலும் தனிமையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.