சாலமன் தீவில் முதல் நபருக்கு கரோனா தொற்று பதிவு
சாலமன் தீவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சாலமன் தீவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா சோதனை செய்ததில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.
Advertisement
சாலமன் தீவு பிரதமர் மனாசே சோகாவரே சனிக்கிழமை தேசிய அளவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய உரையில், கடந்த மாத இறுதியில் பிலிப்பைன்ஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒரு சாலமன் தீவு மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
நாட்டில் தொற்றுப் பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், கரோனா இலவசமாக உள்ளே நுழைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.