முகப்பு
இந்தியா

தாணேவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 5 அக்டோபர், 2020 at 12:23 PM
Covid cases continue to rise in Thane
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,81,499 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,589 ஆக உயர்ந்துள்ளது. 

தாணே மாவட்டத்தில் மீட்பு விகிதம் 87.76 (1,59,276) சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.53 சதவீதமாக (4,589) உள்ளது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.