முகப்பு
இந்தியா

ஒடிசா: ராஜ்பவன் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

ஒடிசாவில் ராஜ்பவன் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
ஒடிசா: ராஜ்பவன் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி
பகிர்:

ஒடிசாவில் ராஜ்பவன் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ராஜ்பவன் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீர்களுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

எனினும் தீ விபத்தில் சிக்கி 9 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறை ஆணையர் சாரங்கி தெரிவித்திருந்தார். 

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தனர்.

இதில் 60 சதவிகித தீக்காயங்களுடன் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதுடைய சத்யா நாயக் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

ரிபு தாமன் என்ற 40 வயதுடைய மற்றொரு நபர் லக்னெள மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 72 மணிநேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல் விற்பனை நிலையத் தீ விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →