முகப்பு
இந்தியா

பிகார் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்தார் தேஜஸ்வி யாதவ்

​பிகார் பேரவைத் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (புதன்கிழமை) பேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
​பிகார் பேரவைத் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (புதன்கிழமை) பேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பகிர்:


பிகார் பேரவைத் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (புதன்கிழமை) பேட்புமனுத் தாக்கல் செய்தார்.

முன்னாள் எம்எல்ஏ சதீஷ் யாதவை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் போட்டியிடுகிறார். 

இதுபற்றி தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது:

"ரகோபூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். தொகுதி மக்கள் எங்களை வாழ்த்தினர். அவர்கள் எங்களைத் தேர்வு செய்வார்கள். பிகார் மக்கள் லாலு (லாலு பிரசாத்) இல்லாமல் தவித்து வருகின்றனர். அடுத்த 2 நாள்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன்.

எங்களது வாக்குறுதிகளை நாங்கள் பூர்த்தி செய்வோம். நாங்கள் ஆட்சியமைப்போம். பிகார் மக்கள் எங்களைத் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம்."

சதீஷ் யாதவ் தொடர்ந்து 3-வது முறையாக ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2010 பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியை (தேஜஸ்வியின் தாய்) வீழ்த்தினார். எனினும், 2015-இல் சதீஷ் யாதவைத் தோற்கடித்தார் தேஜஸ்வி யாதவ்.

பிகார் பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.