முகப்பு
இந்தியா

சோபியான் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
Two terrorists killed in Shopian encounter
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சோபியான் மாவட்டதில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சகுரா பகுதியில் புதன்கிழமை பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதால், தேடும் பணியில் பாதுகாப்பபுப்படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.