இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,259 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,259 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14,238 பேர் குணமடைந்துள்ளனர், 250 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,86,321 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13,58,606 பேர் குணமடைந்துள்ளனர், 41,965 பேர் பலியாகியுள்ளனர். 1,85,270 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,791 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,40,339 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,988 பேர் குணமடைந்துள்ளனர், 47 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,08,099 பேர் குணமடைந்துள்ளனர், 9,682 பேர் பலியாகியுள்ளனர். 18,717 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 15 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,400 ஆக உயர்ந்துள்ளது. எனினும் இதில் 140 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,954 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT