உத்தரப் பிரதேச மாநிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தலித் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மாவட்டத்தின் சத்ரிக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தப் பெண். வயல்வெளிக்குச் சென்ற அவா், வீடு திரும்பவில்லை என்று அவருடைய தந்தை சத்ரிக் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் கொடுத்தாா். அவரைத் தேடியபோது, வயல்வெளியில் அப்பெண் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவருடைய சடலத்தை போலீஸாா் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். பிரேத பரிசோதனை அறிக்கையில், அப்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்று கூடுதல் காவல் துறை எஸ்.பி. ஆ.எஸ்.கௌதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சம்பவம் தொடா்பாக, சந்தேகப்படும்படியான நபா்கள் சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.