முகப்பு
இந்தியா

எல்லைப் பிரச்னையில் மௌனம் காக்கும் பிரதமர்: ராகுல் விமரிசனம்

சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
கோப்புப்படம்
பகிர்:


சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கடந்த 2 மாதங்களில் சீனா குறித்து பிரதமர் பேசி கேட்டிருக்கிறீர்களா? இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கும் உண்மை பற்றி மக்கள் கவனம் கொள்ளக் கூடாது என்பதால்தான் அவர் சீன எல்லை விவகாரம் குறித்து பேச மறுக்கிறார். இந்திய நிலப்பரப்பில் 1,200 சதுர கிலோமீட்டரை சீனா ஆக்கிரமித்துள்ளது.

நமது நிலப்பரப்பிலிருந்து சீனர்களை வெளியேற்றுவது பற்றி எப்போது திட்டமிடப்போகிறார் பிரதமர்? இதைத் தவிர தற்போது வேறு பெரிய பிரச்னை ஏதேனும் இருக்கிறதா? இந்திய நிலரப்பரப்பைப் பற்றி பிரதமர் ஏன் ஒரு வார்த்தைகூட பேச மறுக்கிறார்? இது விசித்திரமாக உள்ளது."

முழு கட்டுரையைப் படிக்க →