முகப்பு
இந்தியா

உ.பி.யில் ஜாமீனில் வெளிவந்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை 

உத்தரப் பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் மௌட்டா கிராமத்தில் ஜாமீனில் வெளியே வந்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:42 PM
45-yr-old man commits suicide in UP's Banda district 
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் மௌட்டா கிராமத்தில் ஜாமீனில் வெளியே வந்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சௌரப் சுக்லா (45). கடத்தல் உள்பட 10 வழக்குகள் உள்ள நிலையில், சித்ரகூட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடந்த வாரம் ஜாமீன் கிடைத்து வெளியேறினார் என்று காவல் அதிகாரிகள் அட்டாரா, அகிலேஷ் மிஸ்ரா தெரிவித்தனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.