மகாராஷ்டிரத்தில் மேலும் 7,347 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,347 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:12 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,347 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிதாக 7,347 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,32,544 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 184 பேர் பலியாகியுள்ளனர், 13,247 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 43,015 பேர் பலியாகியுள்ளனர், 14,45,103 பேர் குணமடைந்துள்ளனர். 1,43,922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.