இந்தியா

ரூ.2.35 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகளைத் திருடிய நால்வர் கைது

ANI

புணேவில் விவசாயியிடம் இருந்து ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூட்டைகளைத் திருடிய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புணே புறநகர் காவல்துறையினர் நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புணேவில் வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகள் கடந்த 21-ம் தேதி திருடுப்போனதாக விவசாயி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 49 வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 9 வெங்காய மூட்டைகளை திருடர்கள் விற்றுவிட்டது தெரிய வந்துள்ளது.

வெங்காயம் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, வெங்காய வரத்துக் குறைந்ததால், விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் சில்லறை விற்பனையில் ரூ.100 தொட்டுவிட்ட வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது ரூ.100-க்குக் குறைவாக விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில்தான், விற்பனைக்காக வைத்திருந்த வெங்காய மூட்டைகளை நான்கு பேர் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT