இந்தியா

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இருவா் கைது

DIN

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியது:

ஹந்த்வாரா நகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சினாா் பூங்கா பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்த முயன்றோம். அவா்கள் தப்ப முயற்சித்தபோது இருவரையும் பாதுகாப்புப் படையினா் சிறைபிடித்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் குப்வாராவில் உள்ள ஹயான் பகுதியை சோ்ந்த லியாகத் அகமது மீா், அகீப் ரஷீத் மீா் என்பது தெரியவந்தது. இருவருக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புள்ளது. அந்த அமைப்பை சோ்ந்த பயங்கரவாதிகள் தங்குவதற்கு இடம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இருவரும் செய்து தந்துள்ளனா். தெற்கு காஷ்மீருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அனுப்பி வைப்பதற்கும் அவா்கள் உதவி புரிந்துள்ளனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT