மிசோரத்தில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு
மிசோரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கான மொத்த பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
மிசோரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கான மொத்த பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஐஸ்வால் மாவட்டத்திலிருந்து ஏழு பேரும், கோலாசிப் மாவட்டத்திலிருந்து ஒருவரும் என மொத்த 8 பேர் பாதிக்கப்பட்டனர்.
புதிதாகப் பாதிக்கப்பட்ட நபர்களில் ஐந்து பேர் அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் ஒரு எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) சேர்ந்தவர்கள் ஆகும்.
இதில், 410 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையிலும், 610 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மிசோரத்தில் கரோனா மீட்பு விகிதம் 59.80 சதவீதம் ஆகும். தொற்றுக்கு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.