முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 

ஜம்மு-காஷ்மீர், பாராமுல்லா பகுதியில் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். 

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இந்த சண்டையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரது உடல்நிலை சீராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →