முகப்பு
இந்தியா

சுய தனிமைப்படுத்துதலில் இருந்து விடுபட்டார் பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பரிசோதனையில் தனக்கு கரோனா இல்லையென்று உறுதியானதையடுத்து சுய தனிமைப்படுத்துதலில் இருந்து விடுபட்டுள்ளார். 

Updated On : 5 செப்டம்பர், 2020 at 6:09 PM
Punjab CM ends self-isolation after testing negative for Covid
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:45 PM

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பரிசோதனையில் தனக்கு கரோனா இல்லையென்று உறுதியானதையடுத்து சுய தனிமைப்படுத்துதலில் இருந்து விடுபட்டுள்ளார். 

பஞ்சாபில் கரோனாவால் பாதிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 3 அமைச்சர்கள் மற்றும் 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சட்டசபை கூட்டத்தில் தன்னை சந்தித்த 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

Advertisement

இதையடுத்து, இன்று காலை பரிசோதனை செய்ததில் தனக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதியானது. முதல்வர் அமரீந்தர் சிங் சுய தனிமைப்படுத்துதலில் இருந்து விடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.