ஆப்கன் தாக்குதலில் 25 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானின், லக்மன் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 25 தலிபன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின், லக்மன் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 25 தலிபன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாகாண தலைநகர் மெஹ்தர்லாமின் வடக்கே ஜெய்போன் வட்டாரத்தில் பாதுகாப்புப் படையினர் இருந்த இடத்தை தீவிரவாதிகள் தாக்கினர். தரைப்படைகள் கொண்டு, ஆப்கானிஸ்தான் விமானப்படையினரைத் தாக்கியது.
இந்த தாக்குதலில் தலிபானின் சிவப்பு பிரிவு வீரர்களைச் சேர்ந்த 5 பேர்களும் அடங்குவர். தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.