முகப்பு
மகளிர்மணி

பாசிப்பயறு தேங்காய்ப் பால் மலாய்

வறுத்து உடைத்த பாசிப்பயறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, மென்மையாக வேக விடவும். வெந்தவுடன் பால் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 12:09 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

நாட்டுச்சர்க்கரை, பால், பாசிப் பயறு (வறுத்து உடைத்தது), கெட்டியான தேங்காய்ப் பால், தண்ணீர் - தலா 1 கிண்ணம்

நெய், ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி

Advertisement

Advertisement

முந்திரி - 6

திராட்சை - 1 மேசைக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :

வறுத்து உடைத்த பாசிப்பயறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, மென்மையாக வேக விடவும். வெந்தவுடன் பால் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர், நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து கரைய விடவும். பின்னர் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து 23 நிமிடம் சிம்மில் வைத்துக் கிளறவும். சிறிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து சேர்க்கவும். இறுதியாக ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து, கலக்கி இறக்கவும்.

- நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.